சனி, பிப்ரவரி 3

துபாய் மராத்தான் அனுபவங்கள்

எனது நண்பரும், உள்ளத்தனைய உடல் முகநூல் உடற்பயிற்சி குழுவின் உறுப்பினருமான திரு. சிவாச்சலம், சமீபத்தில் துபாயில் நடந்த மராத்தான் போட்டியொன்றில் கலந்து கொண்டார். முகநூலில் பகிர்ந்து கொண்ட அவரது அனுபவத்தை எனது வலைப்பதிவிலும் பகிர்கிறேன். நண்பரின் அனுபவம் கீழே.
______________________________________________________________________

நெருப்பெருச்சல் பஞ்சாயத்திலிருந்து துபாய் வரை.......

மாரத்தான் ஓடும் ஒவ்வொருவரின் கனவும் ஒருமுறையாவது துபாய் மாரத்தானில் ஓட வேண்டும் என்பதாகத் தானிருக்கும், அந்த பேராசை எனக்கும் உண்டு Jan 30ம் தேதி அதிகாலையில் துபாய் விமான நிலையத்தில் இறங்கியவுடன் சமீபத்தில் தான் துபாய் மாரத்தான் திருவிழா நிறைவுபெற்றதாக தெரியவந்ததும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வேறு ஏதாவது மாரத்தான் போட்டிகள் துபாய் நகரையொட்டிய பகுதியில் நடைபெறுகிறதா என தேட ஆரம்பித்தேன், ஏனெனில் பிப் 04வரை என் சகோதரி வீட்டில் தங்கியிருப்பதாக ஏற்பாடு. பிப் 02ம் தேதி Dubai Sports Council நடத்தும் ஒரு குறு மாரத்தான் போட்டி துபாய் நகரில் நடைபெறுவதாக அறிந்து உடனடியாக பதிவு செய்தேன்.

போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன, கடந்த ஒருமாதமாக நான் எந்த ஓட்டப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை, மேலும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் சரியான சைவ உணவு கிடைக்காமல் காலம் தவறிய பொருந்தாத உணவு முறை, சரியான தூக்கமின்மை, மற்றும் தொடர் பயணங்கள், மற்றும் வியாபார சந்திப்புகள் மற்றும் அதையொட்டிய தயாரிப்பு பணிகள் என்று I lost my body fitness.
ஆனாலும் கிடைத்த இடைவெளியில் அடுத்தநாள் அதிகாலையில் sharja கடற்கரையொட்டிய பிரத்யோகமான ரப்பர் ஓடுதளத்தில் 3கிமீ ஓட்டப்பயிற்சி மேற்கொண்டேன், அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் சில ஐரோப்பியர்களும் அரேபியர்களும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். என்னுடைய ஓட்டம் அன்று சிறப்பாக இல்லை என்றாலும் somehow I felt confident.

போட்டி நடைபெறும் இடம் நகர்புறத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டோம். காரை ஸ்டார்ட் செய்தவுடன் outside Temperature 9 Degree என ஒற்றை இலக்க எண் பளிச்சிட்டது.

பறந்துவிரிந்த கோல்ப் மைதானம் அதையொட்டிய ஐந்து நட்சத்திர விடுதி, அதுவே போட்டியின் ஆரம்ப மையம். அந்த அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் நிறைய ஐரோப்பியர்கள் அரேபியர்கள் மற்றும் சில ஆப்பிரிக்கர்கள், விரல்விட்டு எண்ணும் அளவில் இந்தியர்கள் குழுமியிருந்தனர். குளிர் உண்மையிலேயே கடுமையாக இருந்தது, அனைவரும் அதற்கேற்ற பிரத்யோகமாக நீண்ட காலுறை மற்றும் கையுறை அணிந்திருந்தனர். நான் மிகச்சாதாரணமாக ஸார்ட்ஸ் மற்றும் டி ஸர்ட் மட்டும் அணிந்திருந்தேன்.No shoes and socks
(வெறுங்காலுடன் நான்)
போட்டி துவங்குவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது, போட்டியின் முதல்வரிசையில் தயாராக நின்றிருந்தேன். போட்டியை நடத்துபவர்கள் அங்கே குழுமியிருந்தனர், போட்டியை துவக்கிவைக்க ஸேக் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்தகூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார்...உடனே அங்கிருந்த இரண்டு பேர் என்னைநோக்கி வந்தனர், அவர் என்னிடம் கேட்டார், எங்கள் உரையாடல் இப்படி இருந்தது,


Organiser:நீங்கள் காலணி எதுவும் அணியவில்லையா?

Me: No, I am Barefoot Runner,

Organiser: Is there any special reason?

Me: Nothing, BUT,I practiced such a way,

Organiser: Do you know its unhealthy and not safe?

Me: I know, but its convenient to me,

Organiser :But we cannot allow you for an unsafe run… I am sorry…

Me: மன்னிக்கவும், நீங்கள் இதைப்பற்றித் உங்கள் விதிமுறைகளில் தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை, மேலும் நான் இதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், என்னை நீங்கள் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என்று மன்றாடினேன்.

Organiser: நீங்கள் இதற்குமுன் வெறும் காலில் ஓடியிருக்கிறீர்களா?

Me: சமீபத்தில் நடந்த சென்னை மாரத்தானில் 21.1கிமீ தூரத்தை 2.15 மணி நேரத்தில் வெறும்காலில் ஓடி நிறைவு செய்துள்ளேன்.

Organiser: without Injury?

Me: yes sir…

போட்டி நடத்துபவர்கள் அவர்களுக்குள்ளாக ஏதே பேசிக்கொண்டார்கள்... நான் அதற்குள் சுற்றி இருப்பவர்களை ஒருமுறை நோட்டமிட்டேன், அனைவரும் வெள்ளை வேளேர் என்ற வெள்ளரிபிஞ்சு தோல் சீவிய நிறத்தில் வாட்டசாட்டமான உயரத்தில் விலைஉயர்ந்த sports suit & shoe அணிந்து ஓட்டத்திற்கு தயாராக இருந்தனர். நான் மட்டும் வெறும்காலுடன் மிகச் சாதாரண உடையில் நின்றிருந்தேன்.

அப்போது அந்த வெள்ளைதோல் ஆசாமி என்னிடம் வந்து தெரிவித்தார், எங்கள் குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, உங்களை அனுமதிப்பதென்று முடிவு செய்துள்ளோம், உங்கள் ஓட்டம் பாதுகாப்பானதாகவும் காயம் எதுவும் இன்றி அமைவதற்கும் எங்கள் வாழ்த்துக்கள் என்று கைகுலுகினார். I felt happy.


மிகக்கடுமையான குளிர், முதல்முறையாக பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த ஓட்டக்காரர்களுடன் அந்நிய தேசத்தில் ஓட்டம் ஆரம்பமானது. முதல் இருநூறு மீட்டர் மிகமோசமான சரளைக்கல் தளம். வெறும்கால் ஓட்டத்தை அனுமதிக்க அவர்கள் ஏன் தயங்கினார்கள் என்று எனக்குப் புரிந்தது. அதைக்கடந்தவுடன் மிக அருமையான ஓடுதளம், முதல் மூன்று கிமீ ஓட்டத்தை அனுபவித்து ஓடி முதல் சர்வீஸ் பாய்ண்டை அடைந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி தொண்டையை நனைத்துக்குகொண்டு மீண்டும் ஓட்டத்தை தொடர்ந்தேன். கடும்குளிரால் இடுப்புக்கு கீழே கால்வரை மரத்துப்போயிருந்தது, உடனடியாக வேகத்தைக் கூட்டமுடியவில்லை, அப்போதே கிட்டத்தட்ட 1000 பேர்களுக்குப் பின்தங்கியிருந்தேன்.

ஆறு கிமீ தூரத்தைக் கடந்தபோது குளிர் உடலுக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தது, கால்கள் நன்கு உணர்வுபெற்று நன்கு வேகத்தைக் கூட்டிஓட ஆரம்பித்தேன். இன்னும் ஓடவேண்டிய தூரம் 1.5 கிமீ என்ற நிலையில்,கணுக்கால் தசையில் லேசான வலி ஆரம்பமானது, இனி வேகத்தைக்கூட்டினால் கண்டிப்பாக தசைப்பிடிப்பு ஏற்படும், தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அடுத்து ஒருஅடிகூட எடுத்துவைக்க முடியாது, ஓட்டத்தையும் நிறைவு செய்ய இயலாது என்று மூளை அவசரமாக கட்டளையிட்டது.
உடனடியாக வேகத்தைக் குறைத்து மிகச் சாதாரண வேகத்தில் ஓடி, ஓட்டத்தை நிறைவு செய்தேன். எடுத்திகொண்ட நேரம் 56.50,Minutes. Its my personal Best time. இதற்கு முன் 10கிமீ தூரத்தை ஒருமணி நேரத்திற்கு குறைவாக ஒருமுறை கூட நான் நிறைவு செய்தது இல்லை.

என்னுடைய பிரிவில் (ஆண்கள், வயது 40 - 44) நான் பத்தாவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்திருந்தேன். பொதுப்பிரிவில் 97 ம் இடம். 


மருத்துவக்குழு உடனடியாக அழைத்துச் சென்று சர்க்கரை, மற்றும் இரத்த அழுத்தை பரிசோதனை செய்தனர், பல்வேறு வகையான Fruit pack, Energy Drink இலவசமாக வழங்கப்பட்டது,
ஒரு அழகிய shoulder bag, Runners water bottle, First Aid kid, Apple, Banana Dairy, அடங்கிய கிப்ட் கிட் ஒன்றை பரிசாக வழங்கினார்கள்.

ருசியான free Break fast .

இந்த போட்டியில் நான் கலந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருந்த எங்கள் மாப்பிள்ளை குமார் அவர்களுக்கு இந்த பரிசை காணிக்கையாக்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)