வெள்ளி, ஜனவரி 22

குடிமகன்களுக்கான கள்ளுப்பாடல்


தமிழத்தில் மதுவிலக்கு அமல்படுத்தவே முடியாதென்று சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிக்கிறார். இதை மதுகுடிப்போர் சங்கமும் வரவேற்றுள்ளது. சுகந்திரமாய் டாஸ்மாக்கில் குடிமகன்கள் குடித்து கொண்டே இருக்க அரசு என்றும் உறுதுணையாய் இருக்கும், மதுவிலக்கிற்கு எதிரான போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குமென்பதே நடந்த, நடக்கவிருக்கும் உண்மை.  

குடிப்பவர்க்கு போலிசு பாதுகாப்பு
அதை எதிர்ப்பவர்க்கு சிறை
மது விற்பனையே அரசின் கொள்கை
அதுவே இன்றைய நிலை

இன்று அதிக சுகந்திரமும், பாதுகாப்பும் தமிழ்நாட்டில் கொண்டோர் மது குடிப்பவர்களே, அவர்கள் அதை உற்சாகமாய் கொண்டாடி பாடி களிக்கவே இந்த “ கள்ளுப்பாடல்”.

யார் கண்டது நாளையே, இதே போன்ற பாடல் கூட தமிழ்நாட்டின் தேசியகீதமாகலாம்.

பல்லவி 
ஆடுவோமே - குவாட்டர் போடுவோமே:
குடிகாரர்க்கு  சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று(ஆடுவோமே)

சரணங்கள் 
1.பார்ப்பானை ஐயரென்ற காலமும் ஆச்சே -கொள்ளை 

ஜெயாவை அம்மாவென்ற காலமும் ஆச்சேஓட்டு பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் ஆச்சே - நம்மை 
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யுங் காலமும் ஆச்சே.(ஆடுவோமே)  

2.எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்  

எல்லோருக்கும் குடியின்பமென்ப துறுதியாச்சு
மது வெறி கொண்டே யூதுவோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத் தோதுவோமே(ஆடுவோமே)

3.
எல்லாரு குடிகாரென்னுங் காலம் வந்ததே- பொய்யும்
ஏமாற்றுந் செழிக்கின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்ருக்கும் நாசம் வந்ததே -கெட்ட
நயவஞ்சகக் காரருக்கு காலம் வந்ததே.(ஆடுவோமே)

4.
உழவுக்குந் தொழிலுக்கும் நிந்தனை செய்வோம் - டாஸ்மாக்கில்
குடித்துகளித் திருபோரை வந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் -வெறும்
குடும்பத்துக் குழைதுடலம் ஓயமாட்டோம்.(ஆடுவோமே)

5.
குடியருக்கு நாடுநம தென்பறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்பறிந்தோம் - இந்தப்
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம்குடி
போதைக் கேயடிமை செய்துவாழ்வோம்.(ஆடுவோமே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)